Friday, April 11, 2014

கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லையா?

சிவலிங்கம் காட்டுவது என்ன...? 

கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லையா? என்பது மூல பரம்பொருள் என்று அழைக்கப்படும் ஆதி மூல வஸ்துக்கு உருவம் தேவையில்லை அது இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதார இயக்கு சக்தியாக இருப்பதனால் உருவம் என்பது இல்லாமலேயே அதுவால் இயங்க முடியுமென்று இயக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்

இல்லாத ஒன்று இயங்க இயலாது இயங்கும் அனைத்துக்கும் உருவம் வேண்டும் உருவம் இல்லை என்றால் இயக்கத்தை அறிந்துகொள்ள முடியாது அனுபவிக்கவும் முடியாது எனவே அனைத்தையும் இயங்க வைக்கும் ஆதி சக்தியான கடவுள் உருவத்துடனே இருக்கிறார் அவரை உருவாகவே தரிசிக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்

இறைவன் எல்லாம் வல்லவன் அவரால் ஆகாதது என்று உலகில் எதுவும் இல்லை அப்படி சர்வசக்தி வாய்ந்த கடவுள் உருவம் இல்லாமலும் இருக்கலாம் உருவத்தோடும் இருக்கலாம் அருவுருவாக இருக்கும் பரம்பொருளை தியானிக்க வேண்டியதே ஜீவர்களின் லட்சியம் என்று சிலர் சொல்கிறார்கள் இந்த மூன்று கருத்துக்களும் முடிவே இல்லாமல் உலக முழுவதும் இன்றுவரை விவாதிக்கப்பட்டு வருகிறது

கடவுள் விஷயத்திலும் சரி மற்ற எந்த விஷயத்திலும் சரி அநுபூதி ஒன்றே இறுதி முடிவு என்பது இந்துமதத்தின் மைய கருத்து அதாவது அனுபவத்தால் பெறுகின்ற விடையே இறுதியானது உண்மையானது என்பது இதன் பொருளாகும் அதனாலேயே இறைவனை பற்றி பேசும்போது இந்துமதம் சகுன நிர்குண பிரம்மம் என்று வலியுறுத்தி பேசுகிறது அதாவது அருவுருவான பரம்பொருள் என்பது இதன் ஆதார சுருதியாகும்

அருவுருவான அதாவது உருவம் உடைய உருவம் இல்லாத கடவுளை மனித சிந்தனைய்க்கு எப்படி அடையாள படுத்தி காட்ட முடியுமென்று சிந்தித்த நமது ஞான புருசர்கள் இறைவனின் அருவுரு தன்மையை சிவலிங்கம் மூலம் கண்டறிந்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார்கள் லிங்கம் என்பது அநாதி காலம் தொட்டு பக்தர்களால் வழிபடப்பட்டு வருவதற்கு இந்த அருவுருவ தத்துவமே மூலம் எனலாம்.

அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த சிவபெருமான் என்ற மூல பரம்பொருளின் பரத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவலிங்கமாகும் நிற்குனமான இறைவனின் நிலையை வெளிப்படுத்தும் சிவலிங்கம் மூன்று பகுதிகளை தனக்குள் கொண்டது லிங்கத்தின் பாணபகுதி என்று அழைக்கப்படும் உச்சிபகுதி சிவபாகம் ஆகும் இது பிரபஞ்சத்தின் சம்ஹாரத்தை காட்டுவதாகும் நடுப்பகுதியான ஆவுடையார் மூலபரம்பொருள் காக்கும் சக்தியாக திகழும் விஷ்ணுவை தனக்குள் கொண்டதாகும் கடேசியாக உள்ள அடிப்புறபகுதி சிருஷ்டி என்பது உலகங்களின் அஸ்திவாரம் என்பதை காட்டும் பிரம்ம பகுதியாகும் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கம்

நாம் சிவலிங்கத்தை லிங்கம் என்ற ஒரே பெயரால் அழைத்தாலும் அதற்கு பல பெயர்கள் இருக்கிறது அதாவது இறைவன் உயிர்களுக்கு சாநித்தியராய் நின்று அருள்செயும் லிங்கத்தை பரார்த்த லிங்கம் என்றும் தானாக தோன்றியதை சுயம்பு லிங்கம் என்றும் தேவர்கள் உருவாக்கியதை கண லிங்கம் என்றும் பிரம்மன் மற்றும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டதை தைவீக லிங்கம் என்றும் முனிவர்கள் அசுரர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதை ஆரிட லிங்கம் என்றும் மனிதர்கள் செய்ததை மானுட லிங்கம் என்றும் மண் அரிசி வெண்ணை சந்தனம் புஷ்பம் சக்கரை மாவு ஆகியவற்றால் உருவானதை சணிக லிங்கம் என்றும் அழைக்கிறார்கள்

சகலாதிகரம்,காசியப சிற்ப சாஸ்திரம் ,கந்தபுராணம், தென் குடி திட்டை புராணம்,சிவபரக்ரமம் ஆகிய பழம்பெரும் நூல்கள் சிவலிங்கத்தின் நான்கு வகைகளை பற்றி பேசுகிறது தாளக்குடை போன்ற வடிவுடைய சத்ரகாரம் கோழிமுட்டை வடிவுடைய குக்குண்டாகாரம் வெள்ளரி பழம் வடிவுடைய திருபுடாகாரம் பாதிநிலா வடிவுடைய அர்த்த சந்திராகாரம் என்று லிங்கத்தின் நான்கு வித வடிவங்களுக்கு பெயர் சூட்டி நமக்கு தெரியபடுத்துகின்றது

இதுதவிர ஆயிரம் முகம் கொண்ட பாணலிங்கம் முதல் ஐந்து முகம் கொண்ட பாணலிங்கம் வரை இருக்கிறது முத்து பவளம் வைடூர்யம் படிகம் மரகதம் நீலம் மாணிக்கம் வைரம் கோமேதகம் ஆகிய ரத்தினங்களிலும் சிவலிங்கத்தை உருவாக்கலாம் என்று பல சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன சிவலிங்கம் செய்ய பயன்படும் ரத்தினங்கள் குற்றமற்றவைகலாக இருக்க வேண்டும் அதன் அளவு இரண்டு அங்கலம் முதல்கொண்டு ஆறு அங்குலம் வரை இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன

ஆலயங்களில் உள்ள லிங்கங்களை தவிர மேற்சொன்ன பொருட்களில் லிங்க வடிவங்களை செய்து வீட்டில் வைத்து வழிபட்டால் அரச உறவு தீர்க்க ஆயுள் ஆரோக்கிய உடம்பு செல்வ வளர்ச்சி பகைவர் வீழ்ச்சி நன்மக்கள் பேறு சர்வ வசியம் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்

இந்துமத வழிபாடுகள் எனபது தத்துவங்களையும் விஞ்ஞான ரகசியங்களையும் மட்டும் கொண்டது அல்ல சாதாரண மனிதனின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதற்கு கூட இந்து மத வழிபாட்டு முறைகள் தவறுவது இல்லை அதனால் தான் ஆயிரம் வருடங்கள் அந்நிய காட்டுமிராண்டி மதத்தவர்கள் கண்மூடி தனமான தாக்குதல் நடத்தினாலும் இன்றும் புத்திளமையோடு திகழ்கிறது நாளையும் திகழும்.!சிவலிங்கம் காட்டுவது என்ன...?
கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லையா? என்பது மூல பரம்பொருள் என்று அழைக்கப்படும் ஆதி மூல வஸ்துக்கு உருவம் தேவையில்லை அது இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதார இயக்கு சக்தியாக இருப்பதனால் உருவம் என்பது இல்லாமலேயே அதுவால் இயங்க முடியுமென்று இயக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்
இல்லாத ஒன்று இயங்க இயலாது இயங்கும் அனைத்துக்கும் உருவம் வேண்டும் உருவம் இல்லை என்றால் இயக்கத்தை அறிந்துகொள்ள முடியாது அனுபவிக்கவும் முடியாது எனவே அனைத்தையும் இயங்க வைக்கும் ஆதி சக்தியான கடவுள் உருவத்துடனே இருக்கிறார் அவரை உருவாகவே தரிசிக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்
இறைவன் எல்லாம் வல்லவன் அவரால் ஆகாதது என்று உலகில் எதுவும் இல்லை அப்படி சர்வசக்தி வாய்ந்த கடவுள் உருவம் இல்லாமலும் இருக்கலாம் உருவத்தோடும் இருக்கலாம் அருவுருவாக இருக்கும் பரம்பொருளை தியானிக்க வேண்டியதே ஜீவர்களின் லட்சியம் என்று சிலர் சொல்கிறார்கள் இந்த மூன்று கருத்துக்களும் முடிவே இல்லாமல் உலக முழுவதும் இன்றுவரை விவாதிக்கப்பட்டு வருகிறது
கடவுள் விஷயத்திலும் சரி மற்ற எந்த விஷயத்திலும் சரி அநுபூதி ஒன்றே இறுதி முடிவு என்பது இந்துமதத்தின் மைய கருத்து அதாவது அனுபவத்தால் பெறுகின்ற விடையே இறுதியானது உண்மையானது என்பது இதன் பொருளாகும் அதனாலேயே இறைவனை பற்றி பேசும்போது இந்துமதம் சகுன நிர்குண பிரம்மம் என்று வலியுறுத்தி பேசுகிறது அதாவது அருவுருவான பரம்பொருள் என்பது இதன் ஆதார சுருதியாகும்
அருவுருவான அதாவது உருவம் உடைய உருவம் இல்லாத கடவுளை மனித சிந்தனைய்க்கு எப்படி அடையாள படுத்தி காட்ட முடியுமென்று சிந்தித்த நமது ஞான புருசர்கள் இறைவனின் அருவுரு தன்மையை சிவலிங்கம் மூலம் கண்டறிந்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார்கள் லிங்கம் என்பது அநாதி காலம் தொட்டு பக்தர்களால் வழிபடப்பட்டு வருவதற்கு இந்த அருவுருவ தத்துவமே மூலம் எனலாம்.
அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த சிவபெருமான் என்ற மூல பரம்பொருளின் பரத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவலிங்கமாகும் நிற்குனமான இறைவனின் நிலையை வெளிப்படுத்தும் சிவலிங்கம் மூன்று பகுதிகளை தனக்குள் கொண்டது லிங்கத்தின் பாணபகுதி என்று அழைக்கப்படும் உச்சிபகுதி சிவபாகம் ஆகும் இது பிரபஞ்சத்தின் சம்ஹாரத்தை காட்டுவதாகும் நடுப்பகுதியான ஆவுடையார் மூலபரம்பொருள் காக்கும் சக்தியாக திகழும் விஷ்ணுவை தனக்குள் கொண்டதாகும் கடேசியாக உள்ள அடிப்புறபகுதி சிருஷ்டி என்பது உலகங்களின் அஸ்திவாரம் என்பதை காட்டும் பிரம்ம பகுதியாகும் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கம்
நாம் சிவலிங்கத்தை லிங்கம் என்ற ஒரே பெயரால் அழைத்தாலும் அதற்கு பல பெயர்கள் இருக்கிறது அதாவது இறைவன் உயிர்களுக்கு சாநித்தியராய் நின்று அருள்செயும் லிங்கத்தை பரார்த்த லிங்கம் என்றும் தானாக தோன்றியதை சுயம்பு லிங்கம் என்றும் தேவர்கள் உருவாக்கியதை கண லிங்கம் என்றும் பிரம்மன் மற்றும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டதை தைவீக லிங்கம் என்றும் முனிவர்கள் அசுரர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதை ஆரிட லிங்கம் என்றும் மனிதர்கள் செய்ததை மானுட லிங்கம் என்றும் மண் அரிசி வெண்ணை சந்தனம் புஷ்பம் சக்கரை மாவு ஆகியவற்றால் உருவானதை சணிக லிங்கம் என்றும் அழைக்கிறார்கள்
சகலாதிகரம்,காசியப சிற்ப சாஸ்திரம் ,கந்தபுராணம், தென் குடி திட்டை புராணம்,சிவபரக்ரமம் ஆகிய பழம்பெரும் நூல்கள் சிவலிங்கத்தின் நான்கு வகைகளை பற்றி பேசுகிறது தாளக்குடை போன்ற வடிவுடைய சத்ரகாரம் கோழிமுட்டை வடிவுடைய குக்குண்டாகாரம் வெள்ளரி பழம் வடிவுடைய திருபுடாகாரம் பாதிநிலா வடிவுடைய அர்த்த சந்திராகாரம் என்று லிங்கத்தின் நான்கு வித வடிவங்களுக்கு பெயர் சூட்டி நமக்கு தெரியபடுத்துகின்றது
இதுதவிர ஆயிரம் முகம் கொண்ட பாணலிங்கம் முதல் ஐந்து முகம் கொண்ட பாணலிங்கம் வரை இருக்கிறது முத்து பவளம் வைடூர்யம் படிகம் மரகதம் நீலம் மாணிக்கம் வைரம் கோமேதகம் ஆகிய ரத்தினங்களிலும் சிவலிங்கத்தை உருவாக்கலாம் என்று பல சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன சிவலிங்கம் செய்ய பயன்படும் ரத்தினங்கள் குற்றமற்றவைகலாக இருக்க வேண்டும் அதன் அளவு இரண்டு அங்கலம் முதல்கொண்டு ஆறு அங்குலம் வரை இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன
ஆலயங்களில் உள்ள லிங்கங்களை தவிர மேற்சொன்ன பொருட்களில் லிங்க வடிவங்களை செய்து வீட்டில் வைத்து வழிபட்டால் அரச உறவு தீர்க்க ஆயுள் ஆரோக்கிய உடம்பு செல்வ வளர்ச்சி பகைவர் வீழ்ச்சி நன்மக்கள் பேறு சர்வ வசியம் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்
இந்துமத வழிபாடுகள் எனபது தத்துவங்களையும் விஞ்ஞான ரகசியங்களையும் மட்டும் கொண்டது அல்ல சாதாரண மனிதனின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதற்கு கூட இந்து மத வழிபாட்டு முறைகள் தவறுவது இல்லை அதனால் தான் ஆயிரம் வருடங்கள் அந்நிய காட்டுமிராண்டி மதத்தவர்கள் கண்மூடி தனமான தாக்குதல் நடத்தினாலும் இன்றும் புத்திளமையோடு திகழ்கிறது நாளையும் திகழும்.!

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!!


பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!!

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.!!! திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.
9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.
10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.
12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.
13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.
14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.
21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.
22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.
23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.
24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.
25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.
26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.
27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.
28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.!!!

மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம்

சித்தர்களில் மிக முக்கியமான ஆசான் திருமூலர் அருளிய திருமந்திரத்தில் 

"மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே"

என்று கூறுகிறார்.

அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம் என்ற பொருளைக் குறிகின்றது.

சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது. இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.

சித்தர்களின் உடற்கூற்று அறிவியல்படி ஒரு நாளில் மனிதரில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600. விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. 

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, 

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

>>>>>>>> சித்தர்கள் பற்றிய அரிய பல தகவல்களுக்கு www.siththarkal.com <<<<<<<<<<
சித்தர்களில் மிக முக்கியமான ஆசான் திருமூலர் அருளிய திருமந்திரத்தில்
"மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே"

என்று கூறுகிறார்.
அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம் என்ற பொருளைக் குறிகின்றது.
சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது. இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.
சித்தர்களின் உடற்கூற்று அறிவியல்படி ஒரு நாளில் மனிதரில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600. விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.
பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன,
பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

Thursday, April 10, 2014

பரம்பொருள்...

Photo: மலையுச்சி என்பதுன் தலையுச்சி தானப்பா !! சித்தர்.

ஒன்றில் இருந்து மற்றொன்றில் இல்லாமல் போனால் அதை எப்படி பூரணம் என்று சொல்ல முடியும் ? பரம் பொருள் எல்லாவற்றிலும் நீக்கமற நிரம்பியிருக்கிறார் என்பது உண்மையானால், அவர் கல்லிலும் இருப்பார், புல்லிலுமிருப்பார். பிறகு ஏன் அவர் நட்ட கல்லில் இல்லை என்று சொல்கிறார்கள் ? கறியைத் தன்னகத்து கொண்டிருக்கின்ற சட்டிக்கு அதன் சுவை தெரியுமா ? அது போல கல்லுக்கு தனக்குள் இருக்கும் பரமனைத் தெரியாது. அப்படியானால், அதைத் தெரிந்து கொள்வது எது ? என்றால், அது மனிதனின் அறிவு மட்டுமே. உலகில் வேறு எதுவும் தான் பரமனின் அம்சம் என்பதை உணராது. எனவே இத்தகைய மகத்துவம் பொருந்திய மனத்தை உடைய மனிதன் தன்னுள்ளும் பரமன் இருக்கிறான் என்று உணராமல் வீணே புற விஷயங்களில் தன் மனதை உழலச் செய்து தனது சக்திகள் அனைத்தையும் விரையம் செய்கிறானே, என்ற ஆதங்கத்தில் அப்படிச் சொன்னார்களே தவிர அவர்களுக்கும் தெரியும் கல்லுக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்று. நெறியைப் பற்றிக் கொண்டே இருக்காதே, குறியை நோக்கி முன்னேறு என்பது கோட்பாடு. ஏறிய பின் ஏணியை அங்கேயே விட்டு விட வேண்டும். பின்னால் வருபவர்கள் ஏறுவார்கள். அதைத் தூக்கி நம் தலையில் வைத்துக் கொண்டு அலையக் கூடாது என்பதே சொல்ல வரும் கருத்து.

மனதின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சில பாடல்கள் அப்படித் தெறித்து விழுகின்றன. நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன. கண் பார்க்கிறது. காது கேட்கிறது. மூக்கு முகர்கின்றது. நாக்கு சுவையை உணர்த்துகிறது. தோலில் தொடு உணர்வு உள்ளது. ஆனால், இவை அனைத்தும் இயங்கினாலும் மனம் என்ற ஒன்று இல்லை என்றால் அந்த உணர்வுகள் நம் அறிவுக்குப் புலப்படுமா ? புலப்படாது. இவ்வாறு இவை அனைத்தின் மூலமாகவும் உலகை அறிவது மனமே ஆகும். மனம் புலன்கள் மீது தன் கவனத்தை செலுத்தா விட்டால் காதில் ஒலி கேட்டாலும் கேட்காத நிலை ஏற்பட்டு விடுகிறது. கண் பார்த்தாலும் பார்க்காதது போன்ற நிலை ஏற்படுகிறது. எனவே எல்லா இயக்கங்களுக்கும், அவற்றை உணர்வதற்கும் காரணமாக இருப்பது மனமேயாகும். அப்படி நமக்குள் மனமாகவும், பிரபஞ்ச வெளியில் பிரபஞ்ச மனமாகவும் விளங்குவது பரம்பொருளே. தத்துவங்களாக விரிந்த நிலையில் பல்வேறு ஆற்றல்களாகச், சக்திகளாகப் பிரிந்து நின்று இயங்கும், பரம்பொருள் ஒடுக்க நிலையில் அனைத்தையும் தன்னகத்தே ஒடுக்கிய பேராற்றல் களமாகத் திகழ்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மனம் இயங்குவது விரிவுபட்ட நிலை. மனம் இயங்கவில்லை என்றால் அதுவே ஒடுக்க நிலை. எனவேதான் மனதற்ற நிலையை வேண்டித் தவமியற்றுகிறார்கள். மனதை புற விசயங்களில் ஈடுபடுத்திக் கொண்டேயிருந்தால் அது எண்ணங்களாக விருத்தியாகிக் கொண்டேயிருக்கும். அதை உள்முகமாகச் செலுத்தி, அதன் பிறப்பிடத்தை நோக்கி கொண்டு செல்லும் பொழுது, அதன் விருத்திகள் அனைத்தும் ஒடுங்கி, ஒடுக்க நிலையான பரம்பொருள் நிலையை அடைகின்றது.

எனவே வார்த்தைகளில் தேங்கி நிற்காமல், அதன் உட்பொருளைத் தேடும் பொழுது, ஒருநாளில்லை ஒரு நாள் உண்மைப் பொருள் அறிவில் விளங்க வரும். சிவசக்தி தத்துவ உணர்வே ஞானம். அதைப் பழமாக உருவகப்படுத்தினார்கள். முருகன் தன் ஆற்றலின் மூலம் அடைய நினைக்கிறார். வினாயகர் தன் அறிவின் மூலம் அடைகிறார். இதன் உட்கருத்து வெற்றி, தோல்வியைக் குறிப்பதல்ல. எவர் எவ்வழி சென்றாலும் ஞானத்தின் மூலமாகவே மெய்ப் பொருளை உணரவோ, அடையவோ முடியும் என்பதே. உடனே முருகன் கோவித்துக் கொண்டு, கோவணம் உடுத்தி, தண்டம் கொண்டு மலை உச்சியில் போய் அமர்ந்து கொண்டார் என்பார்கள். கோவணம் உடுத்தி என்பது பற்றுகளைக் களைவதைக் குறிப்பது. ஆறு முகம் என்கிற ஆறு அறிவினையும் அடக்கி தலை உச்சியில் மனதை வைத்து நிலைத்து நிற்பதையே மலை உச்சியாகச் சொன்னார்கள். வேல் கீழே விரிவு பட்ட மனம் மேலே இலக்கை நோக்கி குவிகின்ற நிலையைக் குறிப்பது. தண்டம் என்பது முதுகுத் தண்டாகிய சுழுமுனை நாடியைக் குறிப்பது. ஆறு அறிவால் தான் பெற்ற ஆற்றல்களையெல்லாம் ஒடுக்கி மனதைத் தலை உச்சிக்குக் கொண்டு செல்லும் பொழுது குண்டலினியாகிய சக்தி மேலேறி வருவாள் மெய்ப் பொருளை விளக்கிடுவாள். இதையே சக்தியாகிய உமையவள் வந்து முருகனுக்கு பரம்பொருளின் திருவிளையாடல்களை விளக்கியதாகச் சொல்வார்கள். ஒவ்வொரு புராணங்களுக்குள்ளும் எவ்வளவோ நுட்பங்கள் மறைந்திருக்கின்றன.

உபநிடதங்களாகட்டும், இதிகாசங்களாகட்டும், புராணங்களாகட்டும், சித்தர்கள் பாடல்களாகட்டும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருக்குறளாகட்டும் இவை அனைத்துமே மனிதன் பரம்பொருளை அடைவதைக் குறித்து சொல்லப்பட்ட நுட்பங்களே தவிர வேறொன்றுமில்லை.
மலையுச்சி என்பதுன் தலையுச்சி தானப்பா !! சித்தர்.

ஒன்றில் இருந்து மற்றொன்றில் இல்லாமல் போனால் அதை எப்படி பூரணம் என்று சொல்ல முடியும் ? பரம் பொருள் எல்லாவற்றிலும் நீக்கமற நிரம்பியிருக்கிறார் என்பது உண்மையானால், அவர் கல்லிலும் இருப்பார், புல்லிலுமிருப்பார். பிறகு ஏன் அவர் நட்ட கல்லில் இல்லை என்று சொல்கிறார்கள் ? கறியைத் தன்னகத்து கொண்டிருக்கின்ற சட்டிக்கு அதன் சுவை தெரியுமா ? அது போல கல்லுக்கு தனக்குள் இருக்கும் பரமனைத் தெரியாது. அப்படியானால், அதைத் தெரிந்து கொள்வது எது ? என்றால், அது மனிதனின் அறிவு மட்டுமே. உலகில் வேறு எதுவும் தான் பரமனின் அம்சம் என்பதை உணராது. எனவே இத்தகைய மகத்துவம் பொருந்திய மனத்தை உடைய மனிதன் தன்னுள்ளும் பரமன் இருக்கிறான் என்று உணராமல் வீணே புற விஷயங்களில் தன் மனதை உழலச் செய்து தனது சக்திகள் அனைத்தையும் விரையம் செய்கிறானே, என்ற ஆதங்கத்தில் அப்படிச் சொன்னார்களே தவிர அவர்களுக்கும் தெரியும் கல்லுக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்று. நெறியைப் பற்றிக் கொண்டே இருக்காதே, குறியை நோக்கி முன்னேறு என்பது கோட்பாடு. ஏறிய பின் ஏணியை அங்கேயே விட்டு விட வேண்டும். பின்னால் வருபவர்கள் ஏறுவார்கள். அதைத் தூக்கி நம் தலையில் வைத்துக் கொண்டு அலையக் கூடாது என்பதே சொல்ல வரும் கருத்து.

மனதின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சில பாடல்கள் அப்படித் தெறித்து விழுகின்றன. நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன. கண் பார்க்கிறது. காது கேட்கிறது. மூக்கு முகர்கின்றது. நாக்கு சுவையை உணர்த்துகிறது. தோலில் தொடு உணர்வு உள்ளது. ஆனால், இவை அனைத்தும் இயங்கினாலும் மனம் என்ற ஒன்று இல்லை என்றால் அந்த உணர்வுகள் நம் அறிவுக்குப் புலப்படுமா ? புலப்படாது. இவ்வாறு இவை அனைத்தின் மூலமாகவும் உலகை அறிவது மனமே ஆகும். மனம் புலன்கள் மீது தன் கவனத்தை செலுத்தா விட்டால் காதில் ஒலி கேட்டாலும் கேட்காத நிலை ஏற்பட்டு விடுகிறது. கண் பார்த்தாலும் பார்க்காதது போன்ற நிலை ஏற்படுகிறது. எனவே எல்லா இயக்கங்களுக்கும், அவற்றை உணர்வதற்கும் காரணமாக இருப்பது மனமேயாகும். அப்படி நமக்குள் மனமாகவும், பிரபஞ்ச வெளியில் பிரபஞ்ச மனமாகவும் விளங்குவது பரம்பொருளே. தத்துவங்களாக விரிந்த நிலையில் பல்வேறு ஆற்றல்களாகச், சக்திகளாகப் பிரிந்து நின்று இயங்கும், பரம்பொருள் ஒடுக்க நிலையில் அனைத்தையும் தன்னகத்தே ஒடுக்கிய பேராற்றல் களமாகத் திகழ்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மனம் இயங்குவது விரிவுபட்ட நிலை. மனம் இயங்கவில்லை என்றால் அதுவே ஒடுக்க நிலை. எனவேதான் மனதற்ற நிலையை வேண்டித் தவமியற்றுகிறார்கள். மனதை புற விசயங்களில் ஈடுபடுத்திக் கொண்டேயிருந்தால் அது எண்ணங்களாக விருத்தியாகிக் கொண்டேயிருக்கும். அதை உள்முகமாகச் செலுத்தி, அதன் பிறப்பிடத்தை நோக்கி கொண்டு செல்லும் பொழுது, அதன் விருத்திகள் அனைத்தும் ஒடுங்கி, ஒடுக்க நிலையான பரம்பொருள் நிலையை அடைகின்றது.

எனவே வார்த்தைகளில் தேங்கி நிற்காமல், அதன் உட்பொருளைத் தேடும் பொழுது, ஒருநாளில்லை ஒரு நாள் உண்மைப் பொருள் அறிவில் விளங்க வரும். சிவசக்தி தத்துவ உணர்வே ஞானம். அதைப் பழமாக உருவகப்படுத்தினார்கள். முருகன் தன் ஆற்றலின் மூலம் அடைய நினைக்கிறார். வினாயகர் தன் அறிவின் மூலம் அடைகிறார். இதன் உட்கருத்து வெற்றி, தோல்வியைக் குறிப்பதல்ல. எவர் எவ்வழி சென்றாலும் ஞானத்தின் மூலமாகவே மெய்ப் பொருளை உணரவோ, அடையவோ முடியும் என்பதே. உடனே முருகன் கோவித்துக் கொண்டு, கோவணம் உடுத்தி, தண்டம் கொண்டு மலை உச்சியில் போய் அமர்ந்து கொண்டார் என்பார்கள். கோவணம் உடுத்தி என்பது பற்றுகளைக் களைவதைக் குறிப்பது. ஆறு முகம் என்கிற ஆறு அறிவினையும் அடக்கி தலை உச்சியில் மனதை வைத்து நிலைத்து நிற்பதையே மலை உச்சியாகச் சொன்னார்கள். வேல் கீழே விரிவு பட்ட மனம் மேலே இலக்கை நோக்கி குவிகின்ற நிலையைக் குறிப்பது. தண்டம் என்பது முதுகுத் தண்டாகிய சுழுமுனை நாடியைக் குறிப்பது. ஆறு அறிவால் தான் பெற்ற ஆற்றல்களையெல்லாம் ஒடுக்கி மனதைத் தலை உச்சிக்குக் கொண்டு செல்லும் பொழுது குண்டலினியாகிய சக்தி மேலேறி வருவாள் மெய்ப் பொருளை விளக்கிடுவாள். இதையே சக்தியாகிய உமையவள் வந்து முருகனுக்கு பரம்பொருளின் திருவிளையாடல்களை விளக்கியதாகச் சொல்வார்கள். ஒவ்வொரு புராணங்களுக்குள்ளும் எவ்வளவோ நுட்பங்கள் மறைந்திருக்கின்றன.

உபநிடதங்களாகட்டும், இதிகாசங்களாகட்டும், புராணங்களாகட்டும், சித்தர்கள் பாடல்களாகட்டும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருக்குறளாகட்டும் இவை அனைத்துமே மனிதன் பரம்பொருளை அடைவதைக் குறித்து சொல்லப்பட்ட நுட்பங்களே தவிர வேறொன்றுமில்லை.

இவ்வுலகனைத்தையும் இயக்குகின்ற சக்தி ஒன்றே!!!


Photo: தாமரை இலையானது தண்ணீரிலேயே தோன்றி தண்ணீரிலேயே வளர்ந்து தண்ணீரிலேயே மிதந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் இல்லாவிட்டால் அது காய்ந்து போகும். ஆனாலும் அது தண்ணீரில் துளி கூட நனைவதில்லை. அவ்வாறே மனிதன் கர்மத்திலேயே பிறந்து, கர்மத்திலேயே வளர்ந்து, வாழ்நாள் முழுவதும் கர்ம சொரூபியாகவே வாழ்கிறான். இருப்பினும் அவன் தன் மெய்யான இயல்பாகிய பிரம்மத்தைச் சார்ந்து இருப்பானேயாகில் எந்தக் கர்மமும் அவனைக் கட்டுப்படுவதில்லை. மனிதனைக் கட்டுப்படுத்துவது கர்மம் என்கிற வினைகள் என்று பொதுவாக நாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் மனிதனைக் கட்டுப்படுத்துவது கர்மமல்ல, கர்மத்தை தானே செய்வதாக ஏற்றுக் கொண்டு அதைச் சுமந்து கொண்டு திரியும் மனமேயாகும். எனவே வேலை செய்வதை ஒருவன் வெறுத்தோ அல்லது வேலை செய்யாமல் சோம்பிக் கிடப்பதையோ ஒருவன் விரும்புவானாகில் அவன் இன்பம் துன்பம் என்கிற இருமைகளில் கட்டுண்டவனாகிறான். அவ்வாறின்றி எத்தனையோ கர்மங்களைப் புரிவதற்கிடையிலும் ஒருவன் விருப்பு வெறுப்பற்று இருப்பானேயானால் அவன் சித்தத்தில் ஒரு விருத்தியும் உருவாவதில்லை. மனதை எதுவும் தளைப்பதில்லை. அப்படிப்பட்டவனே கர்மம் செய்தும் செய்யாதவனாக இருக்கிறான். 

ஒரு குழந்தையின் கையைப் பிடித்து நடக்கக் கற்றுக் கொடுக்கும் தாய், சற்று எட்ட நின்று கொண்டு அந்தக் குழந்தையை தன்னை நோக்கி வா வா என்று அழைப்பது போன்று, பரம்பொருளானது தன்னுடைய அளவில்லாத சக்திகளனைத்தையும் மனிதனுக்கு வழங்கியிருக்கிறாது. அச்சக்திகளைப் பயன்படுத்தி ஜீவனானவன் தன்னிடத்தில் வந்து சேர வேண்டும் என்பதே நோக்கம். அது ஏன் இவ்வாறு படைத்து விட்டு பிறகு தன்னை நோக்கி வரச் செய்ய வேண்டும் ? என்று சிலர் கேட்கிறார்கள். அது இயல்பாகவே நடக்க ஆரம்பித்து விட்ட ஒரு விஷயமாகும். அதனால்தான் அதை இயற்கை என்கிறோம். அவ்வாறு தன்னிலிருந்து பிரிந்து சென்ற அனைத்தையும் தன்னை நோக்கி ஆகர்ஷிக்கின்ற முயற்சியையே மாயை என்கிறோம். அதன் அந்த முயற்சியில் ஒவ்வொன்றாகச் சீரமைக்கப்பட்டு இறுதி கட்டமாக அனைத்தையும் உணர்ந்து அறிவால் தெளியும் மனிதனாக நாம் பரிணமித்திருக்கிறோம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே மனித முயற்சியும், பரம்பொருள் நிலையும் விளங்குகிறது. எனவேதான் தன் முயற்சியால்தான் மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கீதை சொல்கிறது. 

அது தன்னைத் தானே மனிதன் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்கிறது. தன்னைத் தானே கீழ்நிலைக்கு கொண்டு செல்வதும், தனக்குத் தானே நண்பனாக இருப்பதும், தனக்குத் தானே பகைவனாக இருப்பதும் ஜீவனின் முரண்பட்ட இயல்புகளாக இருக்கிறது. எனவே இதிலிருந்து ஜீவனை விடுபடுவதற்கு, மனதை விடுவிப்பதற்கு அது பல யுக்திகளை முன் வைக்கிறது. பாரத்தை சுமந்து செல்வதற்கு சிரமப்படும் ஒருவன் வண்டி ஒன்றை அமர்த்திக் கொள்கிறான். வண்டியில் ஏறி அமர்ந்த பிறகு தலைச் சுமையை இறக்கி வைக்க வேண்டுமா இல்லையா ? இறக்கி வைப்பதில்லை. எனவேதான் பரம்பொருளானவர் சொல்கிறார், நானே வண்டிக்காரன். நானே சாரதி. உன் பாரத்தை என் வண்டியில் இறக்கி வைத்து விடு. அவ்வாறாயின் சுகமாகப் போய்ச் சேர வேண்டிய இடத்தில் நானே உன்னைச் சேர்ப்பிக்கிறேன் என்கிறார். ஆனால், நாமோ பாரத்தை இறக்கி வைப்பதில்லை. அப்படி வைக்க விடாமல் செய்வது எது என்று பார்த்தால், அது வேறொன்றுமில்லை, அதுதான் பற்று. எல்லாம் எனதென்றும், இந்த இந்திரியங்கள், இந்த உடல், இந்த மனம் எல்லாம் தானே என்றும், செயல்களைனத்தும் தன் சக்தியினாலேயே தன் விருப்பப்படியே  நடக்கிறதென்றும்  அனைத்தையும் நம் மனமானது விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. பற்றிக் கொண்டிருப்பதினால்தான் அதைப் பற்று என்று சொல்கிறார்கள். பற்றறுத்தவர் பரமனை அடைவார். 

இவ்வுலகனைத்தையும் இயக்குகின்ற சக்தி ஒன்றே. அதில் ஒரு சிறு பகுதியே மனிதனாவான். மனிதனின் பிராணன், மனம், புலன்கள், அறிவு இவற்றின் மூலம் செயல்படுகின்ற சக்தி பரம்பொருளின் சக்தியின் ஒரு சிறு பகுதியே. இப்படி உலகனைத்திலும் பல்வேறு சக்திகளாக அது விரிந்து இயக்கி நிற்கிறது. இந்த சக்திகளை அடையாளம் தெரிந்து கொண்டு அவை தோன்றுமிடத்தைத் தேடிப் போனால், எல்லாம் பரம்பொருளிடமிருந்தே வருகின்றன என்பது புலனாகும். இதற்கு முயற்சி செய்பவர்கள் யோகிகள். இதை உணர்ந்தவர்களே ஞானிகள். முயற்சியில் வென்றவர்கள் முக்தர்கள். கூர்ந்து கவனித்தால் நம் எல்லோருக்குள்ளும் கண்ணனும், அர்ஜுனனும், பாண்டவர்களும், கௌரவர்களும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலிலும் குருஷேத்திரம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இதில் யார் பாண்டவர்கள் ? யார் கௌரவர்கள் ? எது நல்லது ? எது கெட்டது ? என்பதைத் தீர்மானிப்பது யார் ?
தாமரை இலையானது தண்ணீரிலேயே தோன்றி தண்ணீரிலேயே வளர்ந்து தண்ணீரிலேயே மிதந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் இல்லாவிட்டால் அது காய்ந்து போகும். ஆனாலும் அது தண்ணீரில் துளி கூட நனைவதில்லை. அவ்வாறே மனிதன் கர்மத்திலேயே பிறந்து, கர்மத்திலேயே வளர்ந்து, வாழ்நாள் முழுவதும் கர்ம சொரூபியாகவே வாழ்கிறான். இருப்பினும் அவன் தன் மெய்யான இயல்பாகிய பிரம்மத்தைச் சார்ந்து இருப்பானேயாகில் எந்தக் கர்மமும் அவனைக் கட்டுப்படுவதில்லை. மனிதனைக் கட்டுப்படுத்துவது கர்மம் என்கிற வினைகள் என்று பொதுவாக நாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் மனிதனைக் கட்டுப்படுத்துவது கர்மமல்ல, கர்மத்தை தானே செய்வதாக ஏற்றுக் கொண்டு அதைச் சுமந்து கொண்டு திரியும் மனமேயாகும். எனவே வேலை செய்வதை ஒருவன் வெறுத்தோ அல்லது வேலை செய்யாமல் சோம்பிக் கிடப்பதையோ ஒருவன் விரும்புவானாகில் அவன் இன்பம் துன்பம் என்கிற இருமைகளில் கட்டுண்டவனாகிறான். அவ்வாறின்றி எத்தனையோ கர்மங்களைப் புரிவதற்கிடையிலும் ஒருவன் விருப்பு வெறுப்பற்று இருப்பானேயானால் அவன் சித்தத்தில் ஒரு விருத்தியும் உருவாவதில்லை. மனதை எதுவும் தளைப்பதில்லை. அப்படிப்பட்டவனே கர்மம் செய்தும் செய்யாதவனாக இருக்கிறான்.

ஒரு குழந்தையின் கையைப் பிடித்து நடக்கக் கற்றுக் கொடுக்கும் தாய், சற்று எட்ட நின்று கொண்டு அந்தக் குழந்தையை தன்னை நோக்கி வா வா என்று அழைப்பது போன்று, பரம்பொருளானது தன்னுடைய அளவில்லாத சக்திகளனைத்தையும் மனிதனுக்கு வழங்கியிருக்கிறாது. அச்சக்திகளைப் பயன்படுத்தி ஜீவனானவன் தன்னிடத்தில் வந்து சேர வேண்டும் என்பதே நோக்கம். அது ஏன் இவ்வாறு படைத்து விட்டு பிறகு தன்னை நோக்கி வரச் செய்ய வேண்டும் ? என்று சிலர் கேட்கிறார்கள். அது இயல்பாகவே நடக்க ஆரம்பித்து விட்ட ஒரு விஷயமாகும். அதனால்தான் அதை இயற்கை என்கிறோம். அவ்வாறு தன்னிலிருந்து பிரிந்து சென்ற அனைத்தையும் தன்னை நோக்கி ஆகர்ஷிக்கின்ற முயற்சியையே மாயை என்கிறோம். அதன் அந்த முயற்சியில் ஒவ்வொன்றாகச் சீரமைக்கப்பட்டு இறுதி கட்டமாக அனைத்தையும் உணர்ந்து அறிவால் தெளியும் மனிதனாக நாம் பரிணமித்திருக்கிறோம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே மனித முயற்சியும், பரம்பொருள் நிலையும் விளங்குகிறது. எனவேதான் தன் முயற்சியால்தான் மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கீதை சொல்கிறது.

அது தன்னைத் தானே மனிதன் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்கிறது. தன்னைத் தானே கீழ்நிலைக்கு கொண்டு செல்வதும், தனக்குத் தானே நண்பனாக இருப்பதும், தனக்குத் தானே பகைவனாக இருப்பதும் ஜீவனின் முரண்பட்ட இயல்புகளாக இருக்கிறது. எனவே இதிலிருந்து ஜீவனை விடுபடுவதற்கு, மனதை விடுவிப்பதற்கு அது பல யுக்திகளை முன் வைக்கிறது. பாரத்தை சுமந்து செல்வதற்கு சிரமப்படும் ஒருவன் வண்டி ஒன்றை அமர்த்திக் கொள்கிறான். வண்டியில் ஏறி அமர்ந்த பிறகு தலைச் சுமையை இறக்கி வைக்க வேண்டுமா இல்லையா ? இறக்கி வைப்பதில்லை. எனவேதான் பரம்பொருளானவர் சொல்கிறார், நானே வண்டிக்காரன். நானே சாரதி. உன் பாரத்தை என் வண்டியில் இறக்கி வைத்து விடு. அவ்வாறாயின் சுகமாகப் போய்ச் சேர வேண்டிய இடத்தில் நானே உன்னைச் சேர்ப்பிக்கிறேன் என்கிறார். ஆனால், நாமோ பாரத்தை இறக்கி வைப்பதில்லை. அப்படி வைக்க விடாமல் செய்வது எது என்று பார்த்தால், அது வேறொன்றுமில்லை, அதுதான் பற்று. எல்லாம் எனதென்றும், இந்த இந்திரியங்கள், இந்த உடல், இந்த மனம் எல்லாம் தானே என்றும், செயல்களைனத்தும் தன் சக்தியினாலேயே தன் விருப்பப்படியே நடக்கிறதென்றும் அனைத்தையும் நம் மனமானது விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. பற்றிக் கொண்டிருப்பதினால்தான் அதைப் பற்று என்று சொல்கிறார்கள். பற்றறுத்தவர் பரமனை அடைவார்.

இவ்வுலகனைத்தையும் இயக்குகின்ற சக்தி ஒன்றே. அதில் ஒரு சிறு பகுதியே மனிதனாவான். மனிதனின் பிராணன், மனம், புலன்கள், அறிவு இவற்றின் மூலம் செயல்படுகின்ற சக்தி பரம்பொருளின் சக்தியின் ஒரு சிறு பகுதியே. இப்படி உலகனைத்திலும் பல்வேறு சக்திகளாக அது விரிந்து இயக்கி நிற்கிறது. இந்த சக்திகளை அடையாளம் தெரிந்து கொண்டு அவை தோன்றுமிடத்தைத் தேடிப் போனால், எல்லாம் பரம்பொருளிடமிருந்தே வருகின்றன என்பது புலனாகும். இதற்கு முயற்சி செய்பவர்கள் யோகிகள். இதை உணர்ந்தவர்களே ஞானிகள். முயற்சியில் வென்றவர்கள் முக்தர்கள். கூர்ந்து கவனித்தால் நம் எல்லோருக்குள்ளும் கண்ணனும், அர்ஜுனனும், பாண்டவர்களும், கௌரவர்களும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலிலும் குருஷேத்திரம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இதில் யார் பாண்டவர்கள் ? யார் கௌரவர்கள் ? எது நல்லது ? எது கெட்டது ? என்பதைத் தீர்மானிப்பது யார் ?

Wednesday, April 9, 2014

நம்பிக்"கை"யே இறைவனின் "கை"..


Photo: நம்பிக்கை தான் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அஸ்திவாரமாக இருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்து விடும் மூச்சு நமக்கு சொந்தமா ? நாம் பிழைத்திருப்போமா என்பதும் யாருக்கும் தெரியது. ஆனாலும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் நம் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனாலும், நம் வாழ்க்கை அனுபவங்களின் பெரும் பகுதிகளில் நாம் நம்பிக்கை சிதைக்கப்பட்டவர்களாக, ஏமாற்றப்பட்டவர்களாகவே இருக்கிறோம். இதனால் எதை நம்புவது, யாரை நம்புவது என்ற கேள்விக்கு விடை காணுவதற்குள்ளாகவே எல்லாம் முடிந்து விடுகின்றது. கணவனை மனைவி நம்புகிறாள், மனைவியைக் கணவன் நம்புகிறான், பெற்றோரைப் பிள்ளைகள் நம்புகின்றன, பிள்ளைகளைப் பெற்றோர் நம்புகின்றனர், நண்பர்கள், உற்றார், உறவினர், முதலாளி, தொழிலாளி என்று எல்லாத் தரப்பிலும் ஒருவருக்கொருவர்  நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால், கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நம்பிக்கை துரோகம் இல்லாத களம் வெகு குறைவே. தன்னை பாதுகாத்துக் கொள்ளவோ, தான் துன்பத்திலிருந்து விடுபட்டுக் கொள்வதற்காகவோ, சுய நலம் முன்னிட்டோ எல்லாத் தரப்பினிலும் துரோகம் காணப்படுகிறது. எனவே நம்மில் பெரும்பாலானோர் நம்பிக்கை இழந்தவர்களாகவே இருக்கிறோம். பிறர் மீது நம்பிக்கை இல்லாமல் போவதால், எந்த விஷயத்திலும் தைரியமாக, முழு மனதோடு ஈடுபடமுடியாமல் போய் விடுவதால் முடிவில் தானும் தன்னம்பிக்கை இழந்தவர்களாகவே ஆகி விடுகிறோம்.

எதை இழந்தாலும் ஒருவன் தனது தன்னம்பிக்கையை இழக்கவே கூடாது. தன்னம்பிக்கை இருப்பவனிடத்து மன உறுதியும், அறிவில் தெளிவும் இயல்பாகவே அமைந்து விடும். எனவே அப்படிப்பட்டவர்களை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது. ஏனெனில் தன்னம்பிக்கை இருப்பவர்களிடத்தில்தான் தன்முயற்சி மிகுந்து காணப்படும். ஆனால், இந்த உலகில் ஒரு போதும் நம்மை ஏமாற்றாத நம்பிக்கை ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், அதுதான் தெய்வ நம்பிக்கை. தெய்வ நம்பிக்கை என்பது செயல்களால் நிகழ்வது அல்ல. அது மனதிற்குள் ஏற்படுவது. மனம் பரிபக்குவமடைந்த உண்மையான தெய்வ நம்பிக்கை உடையவர்கள் செயல்களில் தீமையே இருக்காது. எனவே அவர்கள் வினைகளின் விளைவுகளாகிய வாழ்வில் துன்பமோ, ஏமாற்றமோ ஒரு போதும் ஏற்படாது. இதைக் குறித்து நம் முன்னோர்கள் பல தெளிவுகளை ஆதாரங்களை நமக்குத் தந்திருந்தாலும், நாம் அவற்றையும் நம்பியும், நம்பாமலும் எண்ணற்றக் கேள்விகளோடு அவநம்பிக்கை கொண்டே விளங்குகிறோம். அவர்கள் கூறியவற்றைக் குறித்து ஆராய முற்படுகிறோமே தவிர, அவர்கள் காட்டிய வழியில் நடக்க முயற்சி செய்வதில்லை. ஒரு சில இடங்களில் தெய்வ  கைங்கரியங்கள் செய்கிறவர்கள் கூட அவ நம்பிக்கையோடு கைங்கரியத்தை ஒரு தொழிலாகவே செய்கிற நிலைமை காணப்படுகிறது. இது வருந்தத்தக்க விஷயமாகும். தெய்வ நம்பிக்கை என்பது பல விதங்களில் காணப்படுகிறது. ஆனால், எல்லா விதமான நம்பிக்கைகளும் மனதைச் செம்மைப்படுத்துவதற்காகவே தரப்பட்டுள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. 

ஒரு ஏழை விதவைத்தாய் தன் மகனை எப்படியாவது மிகச் சிறந்த கல்விமானாக ஆக்க வேண்டும் என்று விரும்பினாள். பள்ளிக் கூடமோ தூரத்தில் இருந்து. அங்கு செல்ல வேண்டுமென்றால் வழியில் உள்ள ஒரு காட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும். வேறு வழி இல்லாமல் அவனை அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்து விட்டு வந்தாள். முதல் நாள் அவள் துணை இருந்ததால் பிரச்சனையில்லாமல் போயிற்று. ஆனால், மறுநாளோ அந்தச் சிறுவன் காட்டைக் கடந்து சென்று வரும் பொழுது மிகவும் பயந்து காய்ச்சலே வந்து விட்டது. உடல் குணமாகி மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமான பொழுது, அவன் தன் தாயைத் துணைக்கு அழைத்தான். அவளோ, மகனே நானும் வேலைக்குச் செல்லாமல் உன்னுடன் வந்து விட்டால் உணவுக்கு என்ன செய்வது ? எனவே பயப்படாதே. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை. நீ அஞ்சாதே. நீ காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பிக்கும் பொழுது ''கண்ணா'' என்று கூப்பிடு. அவன் உனக்குத் துணையாக வருவான் என்று பலவாறாகத் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாள். அவனும் சரியென்று சொல்லி தைரியமாகப் புறப்பட்டுப் போனான். நாட்கள் கடந்து போயின இந்நிலையில் ஒரு நாள் ஆசிரியருக்குப் பிறந்தநாள் வந்தது. எல்லோரும் அவரவர் தகுதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப பரிசுப் பொருட்களை வாங்கிப் பெயரெழுதி மேசையில் வைத்து விட்டனர். அந்த ஏழைச் சிறுவனோ  பால் நிரம்பிய ஒரு மண் சாடியைக் கொண்டு போய் மேசையில் வைத்தான். 

ஆசிரியர் வந்து அனைத்து பரிசுப் பொருட்களையும் பார்த்து மகிழ்ந்து போனார். அப்பொழுது அந்த மண் சாடி அவர் கண்ணில் பட்டது. உடனே வெறுப்போடு பணியாளரைக் கூப்பிட்டு இதைக் கொண்டு போய் வெளியில் போடு என்றார். பணியாளரோ பாலை வீணாக்க வேண்டாமே என்று எண்ணி அதைக் கொண்டு போய் சமையலறையில் உள்ள ஒரு பாத்திரத்தில் ஊற்றினார். ஆனால், அதிசயமாக பாலை ஊற்ற ஊற்ற வந்து கொண்டே இருந்தது. சாடியில் பால் வற்றவே இல்லை. பணியாளர் பயந்து போய் ஆசிரியரிடத்தில் விவரத்தைக் கூறினார். ஆசிரியரும் வந்து பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்தார். இது எப்படி சாத்தியம் என்று அவருக்கு ஒரே குழப்பமாகி விட்டது. உடனே வகுப்பறைக்கு வந்து இந்தப் பால் சாடியைக் கொண்டு வந்தது யார் ? என்று வினவினார். அந்த ஏழைச் சிறுவன் தான் கொண்டு வந்ததாகத் தெரிவித்தான். உனக்கு இது எவ்வாறு கிடைத்தது ? என்று கேட்டார். அவன் சொன்னான் எனக்கு பள்ளிக் கூடம் செல்வதற்குத் துணையாக வரும் கண்ணன் என்கிற சிறுவன் தந்ததாகச் சொன்னான். அவன் யார் ? உனக்குத் தெரிந்தவனா ? என்று ஆசிரியர் கேட்கவே, அவனும் தன் தாய் ஆரம்பத்தில் தன்னிடம் சொன்னபடி தினமும் காட்டுப் பகுதி வந்தவுடன் தான் ''கண்ணா'' என்று அழைப்பதாகவும், உடனே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் தனக்குத் துணையாக வருவதாகவும், உங்கள் பிறந்தநாள் பரிசு வாங்க என் தாயிடம் பணம் கேட்ட பொழுது, அவர்கள் இல்லையென்று சொல்லவே, தான் மிகவும் வருத்தமுடன் இருந்ததாகவும், அதைக் கண்ட சிறுவன் காரணத்தைக் கேட்டறிந்து இந்த பால் சாடியைப் பரிசாகத் தந்ததாகவும் தெரிவித்தான். 

ஆசிரியர் அவன் சொன்னதை நம்பவில்லை. பொய் சொல்லாதே உண்மையைச் சொல் என்று மிரட்டினார். இதை எந்த மந்திரவாதியிடமிருந்து வாங்கி வந்தாய் ? என்று பிரம்பால் அடித்தார். சிறுவன் பயந்து போய் தாங்கள் என்னுடன் வாருங்கள் நான் கண்ணனைக் காட்டுகிறேன் என்று சொன்னான். உடனே ஆசிரியரும் அவனை அழைத்துக் கொண்டு காட்டு வழியின் துவக்கப் பகுதிக்குச் சென்றார். கண்ணனைக் கூப்பிடு பார்ப்போம் என்றார். ஏழைச் சிறுவனும் ''கண்ணா'' ''கண்ணா'' என்று பலமுறை அழைத்தான். கண்ணன் வரவேயில்லை. அவனுக்கு அழுகையாக வந்தது. கண்ணா நீ வரவில்லை என்றால் ஆசிரியர் என்னை நம்ப மாட்டார். நான் பொய்யன் என்று எண்ணி என்னைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மாட்டார். எனவே வந்து விடு என்று கதறி அழுதான். ஆசிரியர் அவனை ஏளனமாகப் பார்த்தார். திடீரென்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. நண்பா உன்னுடைய உள்ளம் தூய்மாயானது. கள்ளம் கபடமற்றது. எனவே நீ அழைத்ததால் நான் வந்தேன். ஆனால், உன் ஆசிரியரின் மனமோ அப்படிப்பட்டதன்று. அவர் நீ சொன்னதை நம்பவில்லை. நான் வந்தாலும் என்னையும் அவர் நம்ப மாட்டார். இப்படிப்பட்ட அவநம்பிக்கை கொண்டவர்களிடத்திற்கு நான் வரவே மாட்டேன் என்றது.  ஆசிரியர் வெட்கமடைந்தார். அந்த மாணவனை தன் வீட்டிலேயே தங்க வைத்துப் படிக்க வைப்பதாக அழைத்துச் சென்றார். இது ஒரு பழைய கதை. கதையின் கரு என்ன என்பது மட்டுமே நமக்கு முக்கியம். ஆகவே, களங்கமில்லாத உண்மையான நம்பிக்கை உள்ளவர்களுக்கு எந்நிலையிலும் இறைவனின் துணை கிடைக்கும் என்பதே கருத்து. 

எத்தெந்த பக்தன் நம்பிக்கையுடன் எந்தெந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்கிறேன். - கீதை அத் 8, சுலோ 21. 
எனவே நம்பிக்கையை அழிவற்ற இறைவன் மேல் வைப்பவர்கள் ஒருபோதும் துன்பப்படுவதில்லை. அதைத் தவிர மற்ற அனைத்து நம்பிக்கைகளும் நிலை மாறக் கூடியவைகளே. இறைவனை வடிவமாகவோ, வடிவமற்றவனாகவோ, ஆற்றல் மிகு சக்தியாகவோ எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக் கொள். ஆனால், நம்பிக்கையை மட்டும் எந்த வித மாறுதலுமில்லாமல் நிலையாகப் பிடித்துக் கொள். நீ கொள்ளும் நம்பிக்கையே இறைவனின் கையாகும். அது ஒருநாளும் நம்பியவரைக் கைவிட்டதில்லை.
நம்பிக்கை தான் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அஸ்திவாரமாக இருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்து விடும் மூச்சு நமக்கு சொந்தமா ? நாம் பிழைத்திருப்போமா என்பதும் யாருக்கும் தெரியது. ஆனாலும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் நம் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனாலும், நம் வாழ்க்கை அனுபவங்களின் பெரும் பகுதிகளில் நாம் நம்பிக்கை சிதைக்கப்பட்டவர்களாக, ஏமாற்றப்பட்டவர்களாகவே இருக்கிறோம். இதனால் எதை நம்புவது, யாரை நம்புவது என்ற கேள்விக்கு விடை காணுவதற்குள்ளாகவே எல்லாம் முடிந்து விடுகின்றது. கணவனை மனைவி நம்புகிறாள், மனைவியைக் கணவன் நம்புகிறான், பெற்றோரைப் பிள்ளைகள் நம்புகின்றன, பிள்ளைகளைப் பெற்றோர் நம்புகின்றனர், நண்பர்கள், உற்றார், உறவினர், முதலாளி, தொழிலாளி என்று எல்லாத் தரப்பிலும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால், கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நம்பிக்கை துரோகம் இல்லாத களம் வெகு குறைவே. தன்னை பாதுகாத்துக் கொள்ளவோ, தான் துன்பத்திலிருந்து விடுபட்டுக் கொள்வதற்காகவோ, சுய நலம் முன்னிட்டோ எல்லாத் தரப்பினிலும் துரோகம் காணப்படுகிறது. எனவே நம்மில் பெரும்பாலானோர் நம்பிக்கை இழந்தவர்களாகவே இருக்கிறோம். பிறர் மீது நம்பிக்கை இல்லாமல் போவதால், எந்த விஷயத்திலும் தைரியமாக, முழு மனதோடு ஈடுபடமுடியாமல் போய் விடுவதால் முடிவில் தானும் தன்னம்பிக்கை இழந்தவர்களாகவே ஆகி விடுகிறோம்.

எதை இழந்தாலும் ஒருவன் தனது தன்னம்பிக்கையை இழக்கவே கூடாது. தன்னம்பிக்கை இருப்பவனிடத்து மன உறுதியும், அறிவில் தெளிவும் இயல்பாகவே அமைந்து விடும். எனவே அப்படிப்பட்டவர்களை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது. ஏனெனில் தன்னம்பிக்கை இருப்பவர்களிடத்தில்தான் தன்முயற்சி மிகுந்து காணப்படும். ஆனால், இந்த உலகில் ஒரு போதும் நம்மை ஏமாற்றாத நம்பிக்கை ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், அதுதான் தெய்வ நம்பிக்கை. தெய்வ நம்பிக்கை என்பது செயல்களால் நிகழ்வது அல்ல. அது மனதிற்குள் ஏற்படுவது. மனம் பரிபக்குவமடைந்த உண்மையான தெய்வ நம்பிக்கை உடையவர்கள் செயல்களில் தீமையே இருக்காது. எனவே அவர்கள் வினைகளின் விளைவுகளாகிய வாழ்வில் துன்பமோ, ஏமாற்றமோ ஒரு போதும் ஏற்படாது. இதைக் குறித்து நம் முன்னோர்கள் பல தெளிவுகளை ஆதாரங்களை நமக்குத் தந்திருந்தாலும், நாம் அவற்றையும் நம்பியும், நம்பாமலும் எண்ணற்றக் கேள்விகளோடு அவநம்பிக்கை கொண்டே விளங்குகிறோம். அவர்கள் கூறியவற்றைக் குறித்து ஆராய முற்படுகிறோமே தவிர, அவர்கள் காட்டிய வழியில் நடக்க முயற்சி செய்வதில்லை. ஒரு சில இடங்களில் தெய்வ கைங்கரியங்கள் செய்கிறவர்கள் கூட அவ நம்பிக்கையோடு கைங்கரியத்தை ஒரு தொழிலாகவே செய்கிற நிலைமை காணப்படுகிறது. இது வருந்தத்தக்க விஷயமாகும். தெய்வ நம்பிக்கை என்பது பல விதங்களில் காணப்படுகிறது. ஆனால், எல்லா விதமான நம்பிக்கைகளும் மனதைச் செம்மைப்படுத்துவதற்காகவே தரப்பட்டுள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு ஏழை விதவைத்தாய் தன் மகனை எப்படியாவது மிகச் சிறந்த கல்விமானாக ஆக்க வேண்டும் என்று விரும்பினாள். பள்ளிக் கூடமோ தூரத்தில் இருந்து. அங்கு செல்ல வேண்டுமென்றால் வழியில் உள்ள ஒரு காட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும். வேறு வழி இல்லாமல் அவனை அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்து விட்டு வந்தாள். முதல் நாள் அவள் துணை இருந்ததால் பிரச்சனையில்லாமல் போயிற்று. ஆனால், மறுநாளோ அந்தச் சிறுவன் காட்டைக் கடந்து சென்று வரும் பொழுது மிகவும் பயந்து காய்ச்சலே வந்து விட்டது. உடல் குணமாகி மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமான பொழுது, அவன் தன் தாயைத் துணைக்கு அழைத்தான். அவளோ, மகனே நானும் வேலைக்குச் செல்லாமல் உன்னுடன் வந்து விட்டால் உணவுக்கு என்ன செய்வது ? எனவே பயப்படாதே. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை. நீ அஞ்சாதே. நீ காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பிக்கும் பொழுது ''கண்ணா'' என்று கூப்பிடு. அவன் உனக்குத் துணையாக வருவான் என்று பலவாறாகத் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாள். அவனும் சரியென்று சொல்லி தைரியமாகப் புறப்பட்டுப் போனான். நாட்கள் கடந்து போயின இந்நிலையில் ஒரு நாள் ஆசிரியருக்குப் பிறந்தநாள் வந்தது. எல்லோரும் அவரவர் தகுதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப பரிசுப் பொருட்களை வாங்கிப் பெயரெழுதி மேசையில் வைத்து விட்டனர். அந்த ஏழைச் சிறுவனோ பால் நிரம்பிய ஒரு மண் சாடியைக் கொண்டு போய் மேசையில் வைத்தான்.

ஆசிரியர் வந்து அனைத்து பரிசுப் பொருட்களையும் பார்த்து மகிழ்ந்து போனார். அப்பொழுது அந்த மண் சாடி அவர் கண்ணில் பட்டது. உடனே வெறுப்போடு பணியாளரைக் கூப்பிட்டு இதைக் கொண்டு போய் வெளியில் போடு என்றார். பணியாளரோ பாலை வீணாக்க வேண்டாமே என்று எண்ணி அதைக் கொண்டு போய் சமையலறையில் உள்ள ஒரு பாத்திரத்தில் ஊற்றினார். ஆனால், அதிசயமாக பாலை ஊற்ற ஊற்ற வந்து கொண்டே இருந்தது. சாடியில் பால் வற்றவே இல்லை. பணியாளர் பயந்து போய் ஆசிரியரிடத்தில் விவரத்தைக் கூறினார். ஆசிரியரும் வந்து பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்தார். இது எப்படி சாத்தியம் என்று அவருக்கு ஒரே குழப்பமாகி விட்டது. உடனே வகுப்பறைக்கு வந்து இந்தப் பால் சாடியைக் கொண்டு வந்தது யார் ? என்று வினவினார். அந்த ஏழைச் சிறுவன் தான் கொண்டு வந்ததாகத் தெரிவித்தான். உனக்கு இது எவ்வாறு கிடைத்தது ? என்று கேட்டார். அவன் சொன்னான் எனக்கு பள்ளிக் கூடம் செல்வதற்குத் துணையாக வரும் கண்ணன் என்கிற சிறுவன் தந்ததாகச் சொன்னான். அவன் யார் ? உனக்குத் தெரிந்தவனா ? என்று ஆசிரியர் கேட்கவே, அவனும் தன் தாய் ஆரம்பத்தில் தன்னிடம் சொன்னபடி தினமும் காட்டுப் பகுதி வந்தவுடன் தான் ''கண்ணா'' என்று அழைப்பதாகவும், உடனே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் தனக்குத் துணையாக வருவதாகவும், உங்கள் பிறந்தநாள் பரிசு வாங்க என் தாயிடம் பணம் கேட்ட பொழுது, அவர்கள் இல்லையென்று சொல்லவே, தான் மிகவும் வருத்தமுடன் இருந்ததாகவும், அதைக் கண்ட சிறுவன் காரணத்தைக் கேட்டறிந்து இந்த பால் சாடியைப் பரிசாகத் தந்ததாகவும் தெரிவித்தான்.

ஆசிரியர் அவன் சொன்னதை நம்பவில்லை. பொய் சொல்லாதே உண்மையைச் சொல் என்று மிரட்டினார். இதை எந்த மந்திரவாதியிடமிருந்து வாங்கி வந்தாய் ? என்று பிரம்பால் அடித்தார். சிறுவன் பயந்து போய் தாங்கள் என்னுடன் வாருங்கள் நான் கண்ணனைக் காட்டுகிறேன் என்று சொன்னான். உடனே ஆசிரியரும் அவனை அழைத்துக் கொண்டு காட்டு வழியின் துவக்கப் பகுதிக்குச் சென்றார். கண்ணனைக் கூப்பிடு பார்ப்போம் என்றார். ஏழைச் சிறுவனும் ''கண்ணா'' ''கண்ணா'' என்று பலமுறை அழைத்தான். கண்ணன் வரவேயில்லை. அவனுக்கு அழுகையாக வந்தது. கண்ணா நீ வரவில்லை என்றால் ஆசிரியர் என்னை நம்ப மாட்டார். நான் பொய்யன் என்று எண்ணி என்னைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மாட்டார். எனவே வந்து விடு என்று கதறி அழுதான். ஆசிரியர் அவனை ஏளனமாகப் பார்த்தார். திடீரென்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. நண்பா உன்னுடைய உள்ளம் தூய்மாயானது. கள்ளம் கபடமற்றது. எனவே நீ அழைத்ததால் நான் வந்தேன். ஆனால், உன் ஆசிரியரின் மனமோ அப்படிப்பட்டதன்று. அவர் நீ சொன்னதை நம்பவில்லை. நான் வந்தாலும் என்னையும் அவர் நம்ப மாட்டார். இப்படிப்பட்ட அவநம்பிக்கை கொண்டவர்களிடத்திற்கு நான் வரவே மாட்டேன் என்றது. ஆசிரியர் வெட்கமடைந்தார். அந்த மாணவனை தன் வீட்டிலேயே தங்க வைத்துப் படிக்க வைப்பதாக அழைத்துச் சென்றார். இது ஒரு பழைய கதை. கதையின் கரு என்ன என்பது மட்டுமே நமக்கு முக்கியம். ஆகவே, களங்கமில்லாத உண்மையான நம்பிக்கை உள்ளவர்களுக்கு எந்நிலையிலும் இறைவனின் துணை கிடைக்கும் என்பதே கருத்து.

எத்தெந்த பக்தன் நம்பிக்கையுடன் எந்தெந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்கிறேன். - கீதை அத் 8, சுலோ 21.
எனவே நம்பிக்கையை அழிவற்ற இறைவன் மேல் வைப்பவர்கள் ஒருபோதும் துன்பப்படுவதில்லை. அதைத் தவிர மற்ற அனைத்து நம்பிக்கைகளும் நிலை மாறக் கூடியவைகளே. இறைவனை வடிவமாகவோ, வடிவமற்றவனாகவோ, ஆற்றல் மிகு சக்தியாகவோ எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக் கொள். ஆனால், நம்பிக்கையை மட்டும் எந்த வித மாறுதலுமில்லாமல் நிலையாகப் பிடித்துக் கொள். நீ கொள்ளும் நம்பிக்கையே இறைவனின் கையாகும். அது ஒருநாளும் நம்பியவரைக் கைவிட்டதில்லை.

அன்போடு செய்யப்படும் காரியம் சிறியதாக இருப்பினும், அதன் விளைவு பேரானந்தம்..

Photo: அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே! 

அன்பு பெருகியதால் என்னைக் காக்க வந்த இறைவனே, பரம்பொருளே என்று விளக்கம் சொல்வார்கள். ஆனால், இறைவனோ அன்பே வடிவமானவன். அவனுடய அன்பு பெருகுவதும் இல்லை, குறைவதும் இல்லை. அது அண்டசராசரமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. எனவே உன்னுடைய அன்பெனும் சுவாபத்தை என் உள்ளத்தில் பெருகச் செய்து என் பவ வினைகளை அழித்து என்னைக் காக்க வந்து என் துன்பங்களையெல்லாம் நீக்கியருளிய இறைவனே, பரம்பொருளே என்பதுதான் சரியான பொருளாகும். பரம்பொருள் மேல் கொள்ளும் அன்பானது நம்மை வினைகளில் இருந்து காத்து முக்தி நிலையாகிய பேரானந்தத்தைத் தந்தருளும். வினைத் தூய்மை பெருகும் அளவு துன்பங்கள் நீங்கி விடும். அதுவே இன்பப் பெருக்கு. 
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே! 
ஆக அன்பு வேறு இறைவன் வேறு அல்ல. உள்ளத்தில் அன்பு பெருகுமளவுக்குப் பரம்பொருளின் சாந்நித்தியம் அங்குப் பொங்கி வழிகிறது. உலகிலேயே சிறந்த அன்பு இரண்டுதான். ஒன்று காணக்கிடைக்காதக் கடவுளின் அன்பு, மற்றொன்று காணக் கூடிய கடவுளாகியத் தாயின் அன்பு. தன்னைக் காட்சிப்படுத்த முடியாத காரணத்தால்தான் கடவுள் தாயைப் படைத்ததாகச் சொல்வார்கள். 

ஆன்மிகம் என்றால் ஆலயங்களுக்குப் போவதுதான் என்று சிலர் எண்ணிக் கொள்கிறார்கள். ஆன்மிகம் என்றாலே அது அன்புதான். அன்பு இல்லாத உள்ளத்தில் பக்தி வளராது. எனவே அன்பு இல்லாதவன் கடவுளை உணர முடியாது. ஏனெனில் அன்புதான் கடவுள். அன்பு என்பது ஒரு உணர்வுதானே என்று கேட்கக் கூடும். அன்பு என்பது உணர்வல்ல, அதுதான் நம் இயல்பு. அதை நோக்கியே நாம் பயணிக்கிறோம். அதுவாக நாம் மாறாத வரை அதுவாகிய இறைவனை அடையவே முடியாது. எனவேதான் பாட்டுச் சித்தர் பாரதியார் ''உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்'' என்று நினைவூட்டுகிறார். அன்பில் எல்லாம் அழியும், துன்பமழியும், சோர்வு அழியும், பயம் அழியும், கோபம் அழியும் இப்படித் தீயவைகளெல்லாம் அழியும். ஆனால் அன்பு என்றுமே அழியவே அழியாது. வறண்ட பாலைவனத்தில் கூட எங்கோ ஓரிடத்தில் ஈரம் இருக்கிறது. ஆனால் மனிதனின் உள்ளத்தில் ????????? அன்பு சுரந்தால்தான் மனம் விசாலமாகும். அது அகண்டாகாரத்தில் கலக்கும். அந்நிலையில் மனிதனும் தெய்வமாகிறான். 

ஒரு பிடி அன்பான கண்ணீரில் நனைந்த அவலுக்குக் கண்ணன் அடிமையாகி விடுகின்றான். ஒரு அன்பான துளசி இலைக்கு பரந்தாமன் அடிமையாகிறான். ஒரு வில்வ தளத்திற்குப் பரமன் அடிமை. அன்பான சொல்லைக் கேட்டால் சக்தி மயங்கி விடுகிறாள். ஒரே ஒரு அருகம் புல்லை அன்போடு சமர்ப்பித்தால் கணபதி கட்டுப்படுகிறார். அன்போடு கண்ணீர் சொறியும் அன்பருக்கு முன் முருகன் ஓடி வருகிறான். அன்போடு மண் விளக்கை ஏற்றினால் போதும் மகாலட்சுமி வந்து அமர்ந்து கொள்கிறாள். இப்படி அன்போடு செய்யப்படும் பக்திக்கு எந்த வித கட்டுபாடுகளும் கிடையாது. அன்பனின் எச்சில் மாமிசத்தையும், எச்சில் தீர்த்தத்தையும், தலையில் சூடிய மலர்களையும் இறைவன் ஏற்றுக் கொள்கிறான். அன்பான ஆண்டாளின் சூடிக் கொடுத்த மாலையையே நாறாயணன் விரும்புகிறான். எனவே அன்புதான் பக்தி. அன்புதான் ஆன்மிகம். இவைகளில் எதையும் கூடச் செய்ய முடியவில்லையா ? பரவாயில்லை, போகட்டும். அடுத்தவரோடு பேசும் பொழுது அன்போடு இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொல்வதானாலும் கூட அதை இனிமையாகச் சொல். அன்புதான் பக்தி. அதைத்தான் இறைவன் விரும்புகிறார். பக்தன் என்ன கொண்டு வருகிறான் என்று இறைவன் பார்ப்பதில்லை. சில பச்சிலைகளை உள்ளன்போடு போட்டால் போதும் பரமேஸ்வரன் மகிழ்ந்து போகிறார். குடம் குடமாகப் பால் கொடுக்கும் பசு கூத் தன் எஜமானர் அன்பாகத் தரும் ஒரு பிடி புல்லுக்கு நெகிழ்ந்து போகிறது. தான் உண்ணும் பொழுது அதிலிருந்து ஒரு பிடி அன்னத்தை பசித்தவனுக்கு அன்போடு தந்தால் போதும் அவன் மனம் குளிர்ந்து விடுகிறது. 

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை 
யாவர்க்குமாம் பாசுவுக்கொரு வாயுறை 
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி 
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. - திருமூலர். 

எனவே அன்போடு செய்யப்படும் காரியம் சிறியதாக இருப்பினும், அதன் விளைவு பேரானந்தம் தரக் கூடியதாக இருக்கும். அன்பினால் அடைய முடியாதது எதுவுமில்லை. ஏனெனில் இப்பிரபஞ்சம் முழுவதும் அன்பு மயமானது. அன்பினால்தான் வேற்றுமை மறைந்து எல்லாம் இறை சொரூபமே என்ற ஞானம் பிறக்கிறது.
அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!

அன்பு பெருகியதால் என்னைக் காக்க வந்த இறைவனே, பரம்பொருளே என்று விளக்கம் சொல்வார்கள். ஆனால், இறைவனோ அன்பே வடிவமானவன். அவனுடய அன்பு பெருகுவதும் இல்லை, குறைவதும் இல்லை. அது அண்டசராசரமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. எனவே உன்னுடைய அன்பெனும் சுவாபத்தை என் உள்ளத்தில் பெருகச் செய்து என் பவ வினைகளை அழித்து என்னைக் காக்க வந்து என் துன்பங்களையெல்லாம் நீக்கியருளிய இறைவனே, பரம்பொருளே என்பதுதான் சரியான பொருளாகும். பரம்பொருள் மேல் கொள்ளும் அன்பானது நம்மை வினைகளில் இருந்து காத்து முக்தி நிலையாகிய பேரானந்தத்தைத் தந்தருளும். வினைத் தூய்மை பெருகும் அளவு துன்பங்கள் நீங்கி விடும். அதுவே இன்பப் பெருக்கு.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!
ஆக அன்பு வேறு இறைவன் வேறு அல்ல. உள்ளத்தில் அன்பு பெருகுமளவுக்குப் பரம்பொருளின் சாந்நித்தியம் அங்குப் பொங்கி வழிகிறது. உலகிலேயே சிறந்த அன்பு இரண்டுதான். ஒன்று காணக்கிடைக்காதக் கடவுளின் அன்பு, மற்றொன்று காணக் கூடிய கடவுளாகியத் தாயின் அன்பு. தன்னைக் காட்சிப்படுத்த முடியாத காரணத்தால்தான் கடவுள் தாயைப் படைத்ததாகச் சொல்வார்கள்.

ஆன்மிகம் என்றால் ஆலயங்களுக்குப் போவதுதான் என்று சிலர் எண்ணிக் கொள்கிறார்கள். ஆன்மிகம் என்றாலே அது அன்புதான். அன்பு இல்லாத உள்ளத்தில் பக்தி வளராது. எனவே அன்பு இல்லாதவன் கடவுளை உணர முடியாது. ஏனெனில் அன்புதான் கடவுள். அன்பு என்பது ஒரு உணர்வுதானே என்று கேட்கக் கூடும். அன்பு என்பது உணர்வல்ல, அதுதான் நம் இயல்பு. அதை நோக்கியே நாம் பயணிக்கிறோம். அதுவாக நாம் மாறாத வரை அதுவாகிய இறைவனை அடையவே முடியாது. எனவேதான் பாட்டுச் சித்தர் பாரதியார் ''உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்'' என்று நினைவூட்டுகிறார். அன்பில் எல்லாம் அழியும், துன்பமழியும், சோர்வு அழியும், பயம் அழியும், கோபம் அழியும் இப்படித் தீயவைகளெல்லாம் அழியும். ஆனால் அன்பு என்றுமே அழியவே அழியாது. வறண்ட பாலைவனத்தில் கூட எங்கோ ஓரிடத்தில் ஈரம் இருக்கிறது. ஆனால் மனிதனின் உள்ளத்தில் ????????? அன்பு சுரந்தால்தான் மனம் விசாலமாகும். அது அகண்டாகாரத்தில் கலக்கும். அந்நிலையில் மனிதனும் தெய்வமாகிறான்.

ஒரு பிடி அன்பான கண்ணீரில் நனைந்த அவலுக்குக் கண்ணன் அடிமையாகி விடுகின்றான். ஒரு அன்பான துளசி இலைக்கு பரந்தாமன் அடிமையாகிறான். ஒரு வில்வ தளத்திற்குப் பரமன் அடிமை. அன்பான சொல்லைக் கேட்டால் சக்தி மயங்கி விடுகிறாள். ஒரே ஒரு அருகம் புல்லை அன்போடு சமர்ப்பித்தால் கணபதி கட்டுப்படுகிறார். அன்போடு கண்ணீர் சொறியும் அன்பருக்கு முன் முருகன் ஓடி வருகிறான். அன்போடு மண் விளக்கை ஏற்றினால் போதும் மகாலட்சுமி வந்து அமர்ந்து கொள்கிறாள். இப்படி அன்போடு செய்யப்படும் பக்திக்கு எந்த வித கட்டுபாடுகளும் கிடையாது. அன்பனின் எச்சில் மாமிசத்தையும், எச்சில் தீர்த்தத்தையும், தலையில் சூடிய மலர்களையும் இறைவன் ஏற்றுக் கொள்கிறான். அன்பான ஆண்டாளின் சூடிக் கொடுத்த மாலையையே நாறாயணன் விரும்புகிறான். எனவே அன்புதான் பக்தி. அன்புதான் ஆன்மிகம். இவைகளில் எதையும் கூடச் செய்ய முடியவில்லையா ? பரவாயில்லை, போகட்டும். அடுத்தவரோடு பேசும் பொழுது அன்போடு இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொல்வதானாலும் கூட அதை இனிமையாகச் சொல். அன்புதான் பக்தி. அதைத்தான் இறைவன் விரும்புகிறார். பக்தன் என்ன கொண்டு வருகிறான் என்று இறைவன் பார்ப்பதில்லை. சில பச்சிலைகளை உள்ளன்போடு போட்டால் போதும் பரமேஸ்வரன் மகிழ்ந்து போகிறார். குடம் குடமாகப் பால் கொடுக்கும் பசு கூத் தன் எஜமானர் அன்பாகத் தரும் ஒரு பிடி புல்லுக்கு நெகிழ்ந்து போகிறது. தான் உண்ணும் பொழுது அதிலிருந்து ஒரு பிடி அன்னத்தை பசித்தவனுக்கு அன்போடு தந்தால் போதும் அவன் மனம் குளிர்ந்து விடுகிறது.

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பாசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. - திருமூலர்.

எனவே அன்போடு செய்யப்படும் காரியம் சிறியதாக இருப்பினும், அதன் விளைவு பேரானந்தம் தரக் கூடியதாக இருக்கும். அன்பினால் அடைய முடியாதது எதுவுமில்லை. ஏனெனில் இப்பிரபஞ்சம் முழுவதும் அன்பு மயமானது. அன்பினால்தான் வேற்றுமை மறைந்து எல்லாம் இறை சொரூபமே என்ற ஞானம் பிறக்கிறது.